Menu
Your Cart

காலச்சுவடு பதிப்பகம்

கவர்ன்மென்ட் பிராமணன்
-5 %
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்..
₹190 ₹200
கவலை
-5 %
இது ஒரு பெண்ணின் கதை. பெண்களின் வாழ்க்கை குடும்பத்தோடு இறுக்கமாக முடிச்சுப் போட்டு வைத்திருப்பதால் இது ஒரு குடும்பத்தின் கதையாகவும் அமைகிறது. தன்வரலாறு, பெண்ணை மையமாகக் கொண்ட குடும்ப வரலாறு என்றும் இதைக் கருதலாம். எழுத்தாளர் பொன்னீலனுக்கும் அவரது தாயார் அழகிய நாயகி அம்மாளுக்கும் இடையே ஒருநாள் ந..
₹599 ₹630
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
-5 %
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..
₹181 ₹190
கவிதை என்னும் வாள்வீச்சு
-5 % Out Of Stock
கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. அதனால்தான் கவிதை பற்றிய நூல்கள் அற்றவர்களாக உள்ளோம். இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாட்ட வறட்சி கொண்டிருக்காது என்றே நினைக்கிறேன். இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது..
₹95 ₹100
கவிதை நயம்
-5 %
கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது; எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகையாக அமைவது; சொற்களால் உருப்பெறுவது; கவிஞனின் தனித்திறனையும் கோருவது; வெளிப்படையாகவோ உள்ளார்ந்த நிலையிலோ ஓசை நயம் உடையது. கவிதையை இயல்பாகச் சுவைக்கலாம். ஆனால் அதன் நுட்பத்தைக் காணவும் திறனாய்வு செய..
₹119 ₹125
கவிதை மாமருந்து - நவீன கவிதை நயம்
-5 %
பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சா..
₹238 ₹250
கவிதை: இன்று முதல் அன்று வரை
-5 %
தமிழின் நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள். மூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை அணுகுகிறார். சமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும் இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக அணுகி மதிப்ப..
₹95 ₹100
கவிதையின் அந்தரங்கம் கவிதையின் அந்தரங்கம்
-5 %
நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன. கவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் பு..
₹238 ₹250
கவிமணி நினைவோடை
-5 %
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் சுந்தர ராமசாமி நிறைவாழ்வு வாழ்ந்த கவிமணிக்கு உரிய அங்கீகாரம் அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலேயே கிடைத்தது கவிமணியின் மற..
₹95 ₹100
கவிமொழி மனமொழி மறுமொழி
-5 %
கவிமொழி மனமொழி மறுமொழி நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற..
₹76 ₹80
காஃப்காவின் நாய்க்குட்டி
-5 %
காஃப்காவின் நாய்க்குட்டிநாம் ஒவ்வொருவருமே பொன், பொருள், புகழ், த்த்துவம், விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்ட்த்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப் பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின் பொருட்டு அல்ல்லிற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புது..
₹280 ₹295
காகங்களின் கதை
-5 % Out Of Stock
காகங்களின் கதைசு.ரா 65 ஆண்டுகளுக்கு மேல் வசித்த ‘சுந்தர விலாஸ்’ இல்லத்தின் மாடியில் ஆறு ஆண்டுகள் அவர் முன்னின்று நடத்திய சுமார் 85 சந்திப்புகளின் வரலாற்றுப் பதிவு இந்நூல்......
₹33 ₹35
Showing 445 to 456 of 1348 (113 Pages)